தமிழ்நாடு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் காலியாக உள்ள மேற்பார்வையாளர் மற்றும் வழக்கு பணியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | குழந்தை நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 09 |
பணியிடம் | தூத்துக்குடி, தமிழ்நாடு |
ஆரம்ப நாள் | 08.09.2025 |
கடைசி நாள் | 22.09.2025 |
1. பதவி: வழக்குப் பணியாளர்
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலியிடங்கள்: 05
கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகவல் தொடர்பு திறன் இருத்தல் வேண்டும்.
2. பதவி: மேற்பார்வையாளர்
சம்பளம்: மாதம் Rs.21,000/-
காலியிடங்கள்: 04
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூக பணி/ கணினி அறிவியல்/ தகவல் தொழில்நுட்பம்/ சமூகம் சார்ந்த சமூகவியல்/ சமூக அறிவியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் மற்றும் கணினியில் திறமை பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 42 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.09.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.09.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தினை https://thoothukudi.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 176, முத்துசுரபி பில்டிங், மணிநகர், பாளை ரோடு, தூத்துக்குடி மாவட்டம் – 628 003. தொலைபேசி எண் – 0461-2331188
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |