விடிய விடிய கொட்டிய கனமழை.. பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எங்கெல்லாம் லீவ்?
சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டி வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களிலும் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழையால் சென்னை உட்பட வடமாவட்டங்களும் தென் மாவட்டங்களும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன ஆனால், அதன் பிறகு மாவட்டத்தில் பெரியளவில் மழை இல்லாமல் இருந்தது. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் மீண்டும் நல்ல மழை பெய்து வருகிறது. கனமழை: நேற்றைய தினமே மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டும் என்றும் இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் வானிலை மையம் எச்சரித்திருந்தது. தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவே இப்படி பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. AD இதற்கிடையே நேற்று இரவு முதலே...