விவசாயிகளே நீங்களும் PM கிசான் திட்டத்தில் ரூ.2000 வாங்கிட்டு இருக்கீங்களா..? இனி ரூ.3000 தரப்போறாங்களாம்..! வெளியான புதிய தகவல்!
விவசாயிகள்தான் இந்தியாவின் முதுகெலும்பு என்று கூறுவார்கள். இத்தகைய விவசாயத்தை காக்கும் நோக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒரு திட்டம் தான் பிரதான் மந்திரி கிசான் சம்மன் திட்டம்(PM கிசான் திட்டம்) ஆகும். PM கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 என ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு 14 வது தவணை வரை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தின் மூலம் பெறப்படும் தொகையை வைத்து விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு தேவையான விவசாய பொருட்களை மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டின் விளைவாசியானது...