தமிழகத்தில் பல்வேறு அரசுத்துறைகள் செயல்பட்டு வருகிறது. இந்த அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் பதவிகளுக்கு ஏற்ப குரூப் 1, குரூப் 2 என பல்வேறு குரூப்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
![குரூப் 1 மற்றும் குரூப் 4 தேர்வர்களே… சற்றுமுன் TNPSC அறிவித்த புதிய அறிவிப்பு உங்களுக்குத்தான்..! உடனே பாருங்க… 1 happy news for Group 1 and Group 4 Candidates TNPSC new notification is for you Watch now](https://jobstamil.in/wp-content/uploads/2023/09/happy-news-for-Group-1-and-Group-4-Candidates-TNPSC-new-notification-is-for-you-Watch-now-1024x576.webp)
அந்த வகையில், துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று கிராம நிர்வாக அலுவலர் (VAO), தட்டச்சர், ஸ்டேனோ டைபிஸ்ட், இளங்கலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி தற்பொழுது குரூப் 1 மற்றும் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் உள்ள 32 பணியிடங்களுக்கான குரூப்1 முதல்நிலை தேர்வானது நடப்பு ஆண்டு நவம்பர் மாதத்திலும், எழுத்து தேர்வானது அடுத்த ஆண்டு ஜூலையிலும் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. மேலும், குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வருகிற நவம்பர் மாதத்திலும் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இதற்கான எழுத்து தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.