தமிழகத்தில் இனி மஞ்சள் நிற பேருந்துகள் : தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் இனி மஞ்சள் நிற பேருந்துகள் : தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் நீல நிறங்களிலும், சிவப்பு நிறங்களிலும் இயங்கி கொண்டிருக்கும் மாநகர பேருந்துகளின் நிறம் தற்பொழுது மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் எட்டு கோட்டங்களில் உள்ள சேதமடைந்த பேருந்துகளை தமிழகம் முழுவதும் சீரமைக்கும் பணியில் போக்குவரத்து துறை ஈடுபட்டுள்ளது. அவற்றின் ஒரு பகுதியாக, பழைய வண்ணம் மாற்றப்பட்டு மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு பேருந்துகள் மாற்றப்பட்டு வந்தது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் இனி அரசு பேருந்துகள் மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு மாற்றப்பட உள்ளது. இதனிடையே நிறம் மட்டும்மல்லாமல் பேருந்துகளின் இருக்கை, அமரும் வசதி போன்றவை விரிவாக இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பேருந்து இயக்கத்தினை நாளை(வெள்ளிக்கிழமை) முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சென்னை, பெங்களூரு, திருச்சி, கரூரில் ஆகிய பகுதிகளில் புதிய பேருந்துகள் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *