தமிழக மாணவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி… தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

தமிழக மாணவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி… தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடிகள் மற்றும் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயன்பெறும் பள்ளிகளில் முன்னாள் முதல்வர்களின் பிறந்த நாள் அன்று மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவையில் இனி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் அன்றும் பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்த நாள் கடந்த ஜூன் 3 ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் கோடை விடுமுறையின் காரணமாக பாள்ளிகள் திறக்கபடாமல் இருந்தது. அதன்பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட பின்பும் மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்படவில்லை.

இதையடுத்து, கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக ஆகஸ்ட் 14 ஆம் தேதி அனைத்து பள்ளிகளிலும் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனால் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகள், பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *