சேலம் & திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை உள்ளூர் விடுமுறை – மாணவர்களுக்கும் லீவு!

aug-09-local-holiday-in-tn-salem-tiruvallu

aug-09-local-holiday-in-tn-salem-tiruvallu

சேலம் & திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை உள்ளூர் விடுமுறை – மாணவர்களுக்கும் லீவு!

சேலம் & திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை உள்ளூர் விடுமுறை – மாணவர்களுக்கும் லீவு!

தமிழகத்தில் நாளை (ஆக. 09) சேலம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை:

ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை (ஆக.09) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதே போல சேலம் மாவட்டத்திலும் நாளை அனைத்து அம்மன் ஆலயங்களிலும் ஆடி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. அம்மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நாளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

 

இந்த விழாவை காண தமிழகம் முழுவதும் இருந்தும் பக்தர்கள் வருகை புரிவர். இதனை முன்னிட்டு நாளை சேலம் மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நாளை அனைத்து கல்வி நிறுவனங்களும். அரசு அலுவலங்களும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *