ரெடி கவுன்டவுன் ஸ்டார்ட் பண்ணலாமா..? விண்ணில் பாய தயாராக இருக்கும் ஆதித்யா எல் 1 விண்கலம்..!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமானது கடந்த ஜூலை 14 ஆம் தேதி நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 3 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த சந்திராயன் 3 விண்கலம் மெல்ல மெல்ல பூமி மற்றும் நிலவின் சுற்றுவட்டப் பாதையை கடந்த நிலவை சென்றடைந்து தற்பொழுது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சந்திராயன் 3 வெற்றிக்கு பின்னர் நிலவை தொடர்ந்து சூரியனை ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.

Can we start the ready countdown Aditya L1 spacecraft is ready to fly in space read it now

அதன்படி, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை தயார் செய்தது இஸ்ரோ. இந்த ஆதித்யா எல் 1 விண்கலமானது செப்டம்பர் 2(நாளை) விண்ணில் செலுத்தப்பட உள்ளது. சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியா சார்பில் அனுப்படும் முதல் விண்கலமாக ஆதித்யா எல் 1 உள்ளது. இது சூரியனின் பல அடுக்குகள் மற்றும் காந்த புயல்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வதற்காக அனுப்பட உள்ளது.

 

மேலும், இந்த ஆதித்யா எல் 1 விண்கலம், பி.எஸ்.எல்.வி.சி 57 ராக்கெட் மூலம் நாளை காலை 11.50 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது. தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள ஆதித்யா எல் 1 விண்கலம், 24 மணி நேர கவுன்ட்டவுன், இன்று காலை 11.50 மணிக்கு தொடங்கவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *