Category: news

The-issue-of-2000-rupee-note-the-new-notification-issued-by-Reserve-Bank-recently-read-now-1068x601 0

2000 ரூபாய் நோட்டு விவகாரம்… சற்றுமுன் ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய அறிவிப்பு!

இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதலே 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியபின் மக்களிடம் அதிகமாக 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இல்லாமல் போனது. இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வங்கியில் சென்று மாற்றி கொள்ளலாம் அல்லது தங்களுடைய வங்கி கணக்கில் வரவு வைத்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. அதன்படி மக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றி வருகின்றனர். இதுகுறித்து ரிசர்வ் வங்கி சில கட்டுபாடுகளையும் விதித்துள்ளது. அதன்படி, நாள் ஒன்றுக்கு ரூ. 20,000 வரை மட்டுமே வங்கியில் மாற்ற முடியும் என்றும் இதற்கான கால அவகாசம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி...

0

உங்க வீட்லையும் பெண் பிள்ளைகள் இருக்காங்களா? அப்போ இந்த செய்தியை உடனே படிங்க… கண்டிப்பா உங்களுக்கும் யூஸ் ஆகும்!!

மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண்களின் கல்வி வளர்ச்சி, அவர்களின் வாழ்வாதார வளர்ச்சி போன்றவைகளுக்கு பல்வேறு உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், தமிழக அரசு பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கும் அவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழக அரசால் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மேற்கொலப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்தில் முதல் பெண் குழந்தை பிறந்தால் ரூ. 50,000அந்த குடும்பத்தில் 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ. 25,000 என வைப்புத்தொகையாக முதலீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு 5 வருடங்களுக்கு ஒரு முறையும் திட்டம் புதுப்பிக்கப்பட்டு குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்தவுடன் தொகை வட்டியுடன் வழங்கப்படும். இந்நிலையில், பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் விண்ணபித்த பலரும் புதுபிகாததால் கருணாநிதியின்...

0

நீங்க வாங்கும் மாத்திரை போலியானதான்னு கண்டுபிடிக்கணுமா? இனி ஈஸியா கண்டுபிடிக்கலாம்..!

வளர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில் விஞ்ஞானம் வளர வளர மனிதர்களுக்கு ஏற்படும் தீங்கு விளைவுகளும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. அந்த வகையில், ஏழை, எளிய மக்கள் முதல் பெரிய பெரிய கோடிஸ்வரர்கள் வரை அனைவரும் உடல்நலத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதனை சரிசெய்ய மருந்துகளை உட்கொண்டு வருகின்றனர். ஆனால், கடந்த சில வருடங்களாகவே போலி மருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், போலி மருந்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மக்கள் பொதுவாகப் பயன்படுத்தும் உயிர்காக்கும் 300 மருந்து அட்டைகளிளல் QR Code அச்சிடுவதை கட்டாயமாக்க, மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, ஆகஸ்ட் 1 ஆம் தேதி(இன்று) முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகின்றது. இதையடுத்து, மருந்து அட்டைகளில் அச்சிடப்பட்டிருக்கும் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்யும் போது...

0

மக்களே ஒரு குட் நியூஸ்! சிலிண்டரின் விலை குறைஞ்சிடிச்சாம்..! அதுவும் எவ்வளவு தெரியுமா?

நாடு முழுவதும் மாதத்தின் முதல் நாள் சர்வதேச எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் சிலிண்டரின் விலையை நிர்ணயித்து வருகின்றனர். இந்த கேஸ் சிலிண்டரின் விலையானது கச்சா எண்ணெய் விலை அவற்றின் ஏற்றுமதி மற்றும் அவற்றின் இறக்குமதி ஆகியவற்றின் ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. கேஸ் சிலிண்டர்களில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு என இருவிலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கேஸ் சிலிண்டர்களின் விலையை மாதந்தோறும் முதல் நாளில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. அந்த வகையில் இன்று சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர் விலைரூ. 92.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளதால் 1,945 ரூபாயில் இருந்து 1,852.50 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், வீட்டு...

0

மாணவர்களே உங்களுக்கு ரூ. ரூ.1.25 லட்சம் வரை கல்வி உதவித்தொகை தராங்களாம்..! உடனே விண்ணப்பியுங்கள்… மாவட்ட கலெக்டரின் புதிய அறிவிப்பு!!

நாடு முழுவதிலும் உள்ள மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தவும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், மத்திய அரசின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் தகுதியான மாணவர்கள் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு தமிழகத்தைச் சார்ந்த 3093 மாணவ, மாணவிகளுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்ப்டடுள்ளது. இத்திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்துக்குள் இருத்தல் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு அல்லது 11 ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் மாணவர்களில் 9 மற்றும்...

0

தமிழகத்தில் (ஆக.02) தேதி மின்தடை – பகுதிகள் குறித்த முழு விவரம் வெளியீடு!

தமிழகத்தில் (ஆக.02) தேதி மின்தடை – பகுதிகள் குறித்த முழு விவரம் வெளியீடு! தமிழகத்தில் (ஆக.02) தேதி மின்தடை – பகுதிகள் குறித்த முழு விவரம் வெளியீடு! காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் ஆக. 02 ஆம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை: பேரலி: கல்பாடி, அசூர், பேராலி தஞ்சாவூர்: யாகப்பநகர், புதிய குடியிருப்பு   கோயம்புத்தூர்: சிஏகோயில், வடுகபாளையம், ஆலம்பாளையம், புதுப்பாளையம், செங்காளிபாளையம் திருச்சி: கோணலை, கல்பாளையம், புறக்குடி, இருங்களூர், தச்சங்குறிச்சி, எஸ்.புதூர், தேவிமங்கலம் கன்னியக்குடி, கரியமாணிக்கம், வாளியூர், பழையூர் எஸ்.புதூர், எஸ்.ஆர்.எம். ஜொர்ஜ்மங்கல், எஸ்.ஆர்.எம். புறம் கோவில், பெரம்பலூர்: துரைமங்கலம், பாலக்கரை, எளம்பலூர், அரணாரை

local-holiday-in-erode-03-aug-2023 0

ஆகஸ்ட் 3ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

ஈரோடு மாவட்டத்தில் ஆக. 03ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு ஆக. 03 ம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அளித்துள்ளார். உள்ளூர் விடுமுறை: தமிழகத்தில் ஆக. 03 ம் தேதி (புதன்கிழமை) ஆடி பெருக்கு நன்னாளை முன்னிட்டு சேலம், தர்மபுரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நாளில் மக்கள் வழிபாட்டு தலங்களுக்கு அதிகம் செல்வர் இதனை கருத்தில் கொண்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்திலும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   அதாவது ஆக. 03 ம் தேதி சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாள்...

are-you-also-using-disney-hotstar-now-only-4-people-can-use-it-see-here 0

நீங்களும் Disney+ Hotstar யூஸ் பண்றீங்களா? இனி 4 பேர் மட்டும் தான் யூஸ் பண்ண முடியும்! நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

இந்தியாவில் கொரோனா காலகட்டத்திற்கு முன்பாக ஓடிடி தங்கள் பற்றி யாருக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால், கொரோனா காலகட்டத்திற்கு பின்பு ஓடிடி தளங்கள் அதிக வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்தியாவில் ஓடிடி தளங்கள் வந்ததில் இருந்து பெரும்பாலானோர் திரையரங்குக்கு சென்று படம் பார்ப்பதையே மறந்து விட்டனர் என்றே சொல்லலாம். இந்த OTT தளங்களை அணுக ஒரு குறிப்பிட்ட அளவு பணம் செலுத்தி அவற்றில் சப்ஸ்கிரைப் செய்தால் மட்டுமே நாம் விரும்பும் படத்தை பார்க்க முடியும். அந்த வகையில், இந்தியாவில் மிகவும் பிரபலமான ஓடிடி தளங்களாக ஜியோ சினிமா, நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார்(disney + Hotstar), ஜீ5 ஆகியவை உள்ளது. இவை ஒன்றோடொன்று போட்டி போட்டு கொண்டு பயனாளர்களை கவரும் வகையில் சலுகைகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்...

important-notification-for-tnpsc-candidates-released-soon-watch-now-dont-miss-it-watch-now 0

TNPSC தேர்வர்களுக்கு சற்றுமுன் முக்கிய அறிவிப்பு வெளியீடு..! மிஸ் பண்ணாம உடனே பாருங்க…

தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக இருக்கும் காலிப்பணியிடங்களுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) நடத்தி வருகிறது. அரசு பணியாளர் தேர்வாணையமானது பல்வேறு துறைகளில் இருக்கும் பதவிக்கு ஏற்ப பல்வேறு குரூப் களாக பிரித்து அதன்படி தேர்வை நடத்தி வருகிறது. அந்த வகையில், TNPSC ஆனது தடய அறிவியல் துணைப் பணியில் ஜூனியர் சயின்டிஃபிக் அதிகாரி பணிக்கான 31 காலியிடங்களுக்கான அர்விப்பை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, இந்த பதவிக்கான தேர்வு கடந்த ஜூலை 27 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், இந்த தேர்வுக்கான விடைகுறிப்புகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடை குறிப்பில் ஏதேனும் தவறோ அல்லது சந்தேகம் இருப்பின் அதனை 07.08.2023 அன்றுக்குள் ஆன்லைன் மூலம் தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், மீன்வள ஆய்வாளர் பணிக்கான 64 காலியிடங்களுக்கான தேர்வுகள்...

people-stay-alert-storm-warning-for-these-districts-in-tamil-nadu-see-here 0

அய்யயோ மக்களே உஷாரா இருந்துகோங்க… தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை..!

தமிழகத்தில் கடந்த மாதம் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 100 டிகிரிக்கும் அதிகமாக கொளுத்தி வந்தது. ஆனால், கடந்த சில தினங்களாக மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தமிழகத்தில் தற்பொழுது வெயிலின் தாக்கம் சற்று குறைந்து குளிர்ந்த நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், தற்பொழுது வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, வடக்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்காளதேசத்தின் கேபுபரா கடற்கரை அருகே, இன்று மாலை கரையை கடக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக...