685 அரசு நடத்துனர் ஓட்டுநர் உடன் நடத்துனர் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பம் – அரசு போக்குவரத்து கழகம்!!


685 அரசு நடத்துனர் ஓட்டுநர் உடன் நடத்துனர் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பம் – அரசு போக்குவரத்து கழகம்!!
685 அரசு நடத்துனர் ஓட்டுநர் உடன் நடத்துனர் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பம் – அரசு போக்குவரத்து கழகம்!!

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் உள்ள 685 ஓட்டுநர் உடன் நடத்துனர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அரசு பணிவாய்ப்பு:

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 685 ஓட்டுநர் உடன் நடத்துனர் (Driver Cum Conductor) காலிப் பணியிடங்களுக்கான பணியாளர்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முன்னதாக அனுமதி அளித்து அறிவிப்பை வெளியிட்டது. இப்பணிகளுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ஆன்லைன் மூலம் தகுதியான நபர்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

தமிழ் மொழியில் எழுதவும், படிக்கவும் தெரிந்த, கனரக வாகன ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம் உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களாக கருதப்படுகிறது. மாதம் ரூபாய் 17,500 முதல் ரூ. 56,200 வரை ஊதியமாக இப்பணிக்கு அளிக்கப்படும். இப்பணிகளுக்கான நபர்களை மேலாண்மை இயக்குனர் தலைமையிலான குழுவானது விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தேர்ந்தெடுக்கும்.

 

இந்நிலையில் இப்பணிக்கான விண்ணப்பங்களை ஆகஸ்ட் 18ஆம் தேதியான நாளை மதியம் ஒரு மணி முதல் செப்டம்பர் 18ஆம் தேதி மதியம் ஒரு மணி வரை விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் http://arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை செலுத்தலாம் என்று அரசு போக்குவரத்துக் கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *