வெளிமாநிலத்தவர்களும் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர் தகவல்!


வெளிமாநிலத்தவர்களும் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர் தகவல்!
வெளிமாநிலத்தவர்களும் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர் தகவல்!

தமிழகத்தில் வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ரேஷன் கார்டு:

இந்தியாவில் வேலைக்காக புலம்பெயர்ந்துள்ள வெளிமாநில தொழிலாளர்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் வாயிலாக நீங்கள் எந்த ஊரில் இருந்து வேண்டுமானாலும் மாதந்தோறும் உங்களின் ரேஷன் கார்டை காண்பித்து பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து தொழிலுக்காக தமிழகம் வந்து நிரந்தர தங்கும் புலம்பெயர்ந்துள்ள நபர்கள் மின்னணு ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

மேலும் வெளி மாநிலத்தவர்கள் தங்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் இதனை வைத்து “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *