பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் மானியம்: மகளிர் நல வாரியம் சூப்பர் அறிவிப்பு – எப்படி விண்ணப்பிப்பது?
மகளிர் நல வாரியம் மூலம் 200 பெண்களுக்கு தலா ரூ.50000 ஆயிரம் வழங்குவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமூக நலத்துறை சார்பில் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் மூலம் 200 பெண்களுக்கு சுயதொழிலுக்காக ரூ.50 ஆயிரம் வீதம் மானியம் வழங்கும் திட்டத்துக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கியுள்ளதுடன், சமூக நல அலுவலரிடம் விண்ணப்பிக்கவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. சமூக நலத்துறை வெளியிட்ட அரசாணை! இது குறித்து சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் வெளியிட்ட அரசாணையில், தமிழகத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை களைந்து அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் கடந்த 2022ம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சமூக நலத்துறை சார்பில் ஆதரவற்ற...