தமிழகத்தில் கருவிழி பதிவின் மூலமாக ரேஷன் வழங்க திட்டம் – அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் கருவிழி பதிவின் மூலமாக ரேஷன் வழங்க திட்டம் – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் கருவிழி பதிவின் மூலமாக ரேஷன் வழங்க திட்டம் – அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்கள் கருவிழி பதிவின் மூலமாகவே ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

ரேஷன் கடை:

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளின் வாயிலாக பொது மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு ரேஷன் பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ரேஷன் கார்டு தொடர்பாக பல்வேறு குளறுபடிகளும் நடைபெற்று வரும் நிலையில் தமிழக அரசு அதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது பொதுமக்கள் ரேஷன் கடைகளின் வாயிலாக கைரேகை மூலமாக ரேஷன் பொருட்களை பெற்று வருகின்றனர்.

ஆனால், பல்வேறு ரேஷன் கடைகளில் கைரேகை சரியாக பதியவில்லை என காரணம் காட்டி ரேஷன் பொருட்கள் வழங்குவது மறுக்கப்படுகிறது. இந்நிலையில், பொது மக்களுக்கு முறையாக ரேஷன் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதனால் பொதுமக்கள் இனி ரேஷன் கடைகளில் கருவிழி மூலமாக பதிவு செய்து தேவையான ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

 

மேலும், கருவிழி மூலமாக ரேஷன் பொருட்களை பெரும் திட்டம் தற்போதைக்கு ஒரு சில ரேஷன் கடைகளில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அடுத்த இரண்டு மாதத்திற்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளின் வாயிலாகவும் பொதுமக்கள் கருவிழி மூலமாகவே பதிவு செய்து ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *