TNSTC Recruitment 2023, Notification, 685 Posts, Drivers & Conductors

அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்று சட்ட சபையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 685 ஓட்டுநர் உடன் நடத்துநர்கள் நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.அதனை தொடர்ந்து .1 8.08.2023 அன்று www.arasubus.tn.gov.in என்றஇணையதளம் மூலம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் உடன் நடத்துநர் பதவிக்கு தகுதியுள்ளவர்கள் நிகழ்நிலையில் (online) விண்ணப்பிக்க லாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இப்பதவிக்கு 18.08.2023 மதியம் 01.00 மணி முதல் 18.09.2023 மதியம் 01.00 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி நியமனம் தொடர்பான அனைத்து விபரங்களும் www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்திலேயே பதிவிடப்பட்டுள்ளது.

 

இப்பதவிக்கான நியமனம் முற்றிலும் வெளிப்படை தன்மை உடையதாக இருக்கும் எனவும், தகுதியின் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்யப்படும் என்றும், தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு. ஓட்டுநர் உடன் நடத்துநர் திறன் தேர்வு (Practical) மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

685 அரசு நடத்துனர் ஓட்டுநர் உடன் நடத்துனர் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பம் – அரசு போக்குவரத்து கழகம்!!

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் உள்ள 685 ஓட்டுநர் உடன் நடத்துனர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அரசு பணிவாய்ப்பு:

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் உள்ள 685 ஓட்டுநர் உடன் நடத்துனர் (Driver Cum Conductor) காலிப் பணியிடங்களுக்கான பணியாளர்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முன்னதாக அனுமதி அளித்து அறிவிப்பை வெளியிட்டது. இப்பணிகளுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ஆன்லைன் மூலம் தகுதியான நபர்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

தமிழ் மொழியில் எழுதவும், படிக்கவும் தெரிந்த, கனரக வாகன ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம் உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களாக கருதப்படுகிறது. மாதம் ரூபாய் 17,500 முதல் ரூ. 56,200 வரை ஊதியமாக இப்பணிக்கு அளிக்கப்படும். இப்பணிகளுக்கான நபர்களை மேலாண்மை இயக்குனர் தலைமையிலான குழுவானது விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தேர்ந்தெடுக்கும்.

 

இந்நிலையில் இப்பணிக்கான விண்ணப்பங்களை ஆகஸ்ட் 18ஆம் தேதியான நாளை மதியம் ஒரு மணி முதல் செப்டம்பர் 18ஆம் தேதி மதியம் ஒரு மணி வரை விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் http://arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை செலுத்தலாம் என்று அரசு போக்குவரத்துக் கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.

 

இத்தகவலை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

வெளியீடு: இணை இயக்குநர் (மக்கள் தொடர்பு),

மாநகர் போக்குவரத்துக் கழகம், சென்னை-02.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *