தமிழகத்தில் ஆக.16 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

august-15-and-16-school-colleges-leave-in-tamilnadu

august-15-and-16-school-colleges-leave-in-tamilnadu

தமிழகத்தில் ஆக.16 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழகத்தில் ஆக.16 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழகத்தில் வாவுபலி நிகழ்வு மற்றும் சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மறைந்த முன்னோர்களின் நினைவாக தாமிரபரணி ஆற்றின் கரையில் பலி தர்ப்பணம் நிகழ்வு நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு, வாவுபலி நிகழ்வு வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த வாவுபலி நிகழ்வினை தொடர்ந்து குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு விவசாய கண்காட்சி நடைபெற இருக்கிறது.

 

இதனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் ஆகஸ்ட் 16 ஆம் தேதி விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை அரசு விடுமுறை என்பதால் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுகட்டும் விதமாக செப்டம்பர் 9 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *