விடிய விடிய கொட்டிய கனமழை.. பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எங்கெல்லாம் லீவ்?

சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டி வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களிலும் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழையால் சென்னை உட்பட வடமாவட்டங்களும் தென் மாவட்டங்களும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன ஆனால், அதன் பிறகு மாவட்டத்தில் பெரியளவில் மழை இல்லாமல் இருந்தது. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் மீண்டும் நல்ல மழை பெய்து வருகிறது.


கனமழை: நேற்றைய தினமே மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டும் என்றும் இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் வானிலை மையம் எச்சரித்திருந்தது. தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவே இப்படி பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. AD இதற்கிடையே நேற்று இரவு முதலே தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக நேற்று காலை 6 மணி முதல் 21.2 செம மழை கொட்டி தீர்த்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மரக்காணத்தில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது.. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பொன்னேரியில் 8 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: இப்படிப் பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வரும் நிலையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக இன்று ஜன.8ஆம் தேதி கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலும் புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பள்ளிகளுக்கு மட்டும்: திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து, அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.அதேபோல வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும், காரைக்காலிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நேற்று இரவு முதலே பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. இந்தச் சூழலில் தான் இப்படிப் பல மாவட்டங்களில் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *