செல்வமகள் சேமிப்பு திட்டம்.. மத்திய அரசின் “சுகன்யா சம்ரிதி யோஜனா”.. பெண்களுக்கான அருமையான சேமிப்பு
சென்னை: உங்கள் பெண் குழந்தைக்கு ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்க வேண்டுமானால், செல்வமகள் திட்டத்தை தாராளமாக துவங்கலாம்.. இந்த சிறப்பு சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) என்று இந்த திட்டத்துக்கு பெயர். இந்த திட்டத்தில் எப்படி சேருவது தெரியுமா? பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு அரசாங்கம் வழங்கும் சிறு சேமிப்புத் திட்டம்தான் இந்த செல்வ மகள் சேமிப்பு திட்டம்.. கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் மோடி, இதை தொடங்கிவைத்திருந்தார். இந்த சிறுசேமிப்புத் திட்டத்தில் மற்ற திட்டங்களை விட அதிக வட்டி வழங்கப்படுகிறது என்பது மிக முக்கியமான விஷயம். குறைந்தபட்சம் ரூ.250 அல்லது நீங்கள் விரும்பும் தொகையை செலுத்தி கணக்கை தொடங்கலாம். அதிகபட்சமாக ஒருவருடத்தில் ரூ. 1.5 லட்சம் வரை செலுத்தலாம். சிறு...