Star TamilExam

0

என்னது வாட்ஸ் அப்ல இப்படி ஒரு வசதி வரப்போகுதா? சற்றுமுன் வெளியான புதிய அப்டேட்..!

வாட்ஸ்அப் நிறுவனம் ஆனது புதிதுபுதிதாக அப்டேட்களை கொண்டுவருகிறது. இந்த நிறுவனம் சில நாட்களுக்கு முன் கால், மெசேஜ், ஸ்டேட்டஸ் பார் கீழே இருக்கும் படி அப்டேட் வழங்க இருப்பதாக அறிவித்துதது. இந்நிலையில், தற்போது புதிதாக PASSKEY எனும் அம்சம் ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த PASSKEY அம்சம் ஆனது பயனாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய அம்சமானது வாட்ஸ்அப் அக்கொண்ட் ஹேக் செய்யப்படுவதில் இருந்து தப்பிக்கவும் உபயோகமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாட்ஸ்அப் அக்கொண்ட்டை 4 டிவைஸ்களில் லாகின் செய்யும் அப்டேட் சமீபத்தில் வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அதனை பாதுகாக்கும் வகையில் புது அப்டேட் வழக்கப்பட்டுள்ளது. என்னவென்றால் , பயனர்கள் வாட்ஸ்அப் அக்கொண்ட்டை லாகின் செய்யும் போது Fingerprint,...

0

தமிழகத்தில் நாளை (ஆக.11) இந்த இடங்களில் மின்தடை – மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை (ஆக.11) இந்த இடங்களில் மின்தடை – மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் நாளை (ஆக.11) இந்த இடங்களில் மின்தடை – மின் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஆக.11 தேதி சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளை இப்பதிவில் காண்போம். மின்தடை: கோவிலூர்: கோவிலூர், கண்டமாணிக்கம், மானகிரி, குன்றக்குடி வாழப்பாடி: செந்தாரப்பட்டி, கூடமலை, கீரிப்பட்டி, நரைக்கிணறு, முள்ளுக்குறிச்சி கோமங்கலம்புதூர்: கோமங்கலபுதூர், கடைமடு, குவுலநாயக்கன்பட்டி, லட்சுமிபுரம், சத்திபாளையம், வத்தநல்லூர், கொல்லர்பட்டி, கள்ளர்பட்டிசுங்கம், நல்லம்பள்ளி, திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி, பூசாரிபட்டி பூலாங்கிணர்: பூலாங்கிணர், ஆந்தியூர், சடையப்பாளையம், பாப்பனுஊத்து, சுண்டகன்பாளையம், வாழவாடி, தளி, குறிச்சிக்கோட்டை, திருமூர்த்திநகர், ராகல்பாவி, மொடகுபட்டி, கஞ்சம்பட்டி, உடகம்பாளையம், பொன்னாலமணசோலை, லட்சுமிபுரம் சென்னை:...

0

உங்க வீட்டு பிள்ளைகளும் கவர்மெண்ட் ஸ்கூல்ல படிக்கிறாங்களா? அரசு பள்ளிகளை குறித்து முதலமைச்சரே பெருமிதம்..! நீங்களும் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்!

கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். 225 மாணவர்களுக்கு சான்றிதழ்களும், மடிக்கணினிகளும் முதலமைச்சர் வழங்கினார். இந்த மாணவர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் பாராட்டுகளை தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியது:- நம்முடைய தமிழகத்தில் இருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைத்து உயர் கல்விக்கு செல்ல வேண்டும். எட்டாக்கனியாக இருந்த கல்வியானது… இன்று எல்லாருக்கும் கிடைத்துள்ளது. IIT-யில் படிக்க இந்த வருடம் ஆறு மாணவர்கள் சென்றுள்ளனர். எல்லாருக்கும் எல்லாம் கிடைத்து ஏற்ற தாழ்வற்ற சமுதாயம் கிடைக்க வேண்டும். கடந்த ஆண்டில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு 75 பேர் சென்றனர். ஆனால் இந்த ஆண்டில் 225 மாணவர்கள் செல்கிறார்கள். கவர்மெண்ட் ஸ்கூலில்...

0

டி.என்.பி.எஸ்.சி தேர்வர்களின் கவனத்திற்கு… இன்று முதல் குரூப் 1 தேர்வு தொடக்கம்..!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது(TNPSC) தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்காக போட்டி தேர்வுகளை நடத்தி அதன் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பி வருகிறது. இந்நிலையில், கலெக்டர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட பதவிக்கான குரூப் 1 காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டது. அதன்படி, கலெக்டர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வானது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டி.என்.பி.எஸ்.சியால் நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான முடிகள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. இந்நிலையில், குரூப் 1 முதல்நிலை தேர்வில் சுமார் 2 ஆயிரத்து 113 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 1,333 ஆண்களும், 780 பெண்களும் ஆவர்....

0

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு நீங்க இன்னும் விண்ணப்பிக்கலையா? கவலை வேண்டாம்… முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தமிழக அரசு வெளியிட்டுள்ள மகளிர் உரிமை திட்ட அறிவிப்பில், “பெண்கள் சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கும், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை 24.07.2023 அன்று தருமபுரி மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இதனையடுத்து, கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களை பதிவு செய்ய இரண்டு கட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 20,765 நியாய விலைக் கடைகளில் இருக்கும் குடும்ப அட்டைகளுக்கு 24.07.2023 முதல் 04.08.2023 வரை நடைபெற்ற விண்ணப்பப் பதிவு முகாமில் 88.34 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முதற்கட்ட சிறப்பு முகாமில் ஒரு சில பெண்கள் விண்ணபிக்க தவறியுள்ளதாக கூறப்பட்ட நிலையில்,...

0

நீங்களும் EMI கட்டிட்டு இருக்கீங்களா? அப்போ RBI அறிவித்த மகிழ்ச்சி செய்தி உங்களுக்குத்தான்!!

ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கமிட்டி கூட்டமானது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கமிட்டி கூட்டத்தில் நாட்டில் பணவீக்க நிலை மற்றும் ரோப்போ வட்டி விகிதம் தொடர்பாக விவாதிக்கப்படும். அதன்படி, இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக் கொள்கை கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறுகையில், நாட்டில் சில்லறை பணவீக்கம் அதிகரித்துள்ளதால் குறுகிய கடன்களுக்கான ரெப்போ வடி விகிதத்தில் தற்பொழுது மற்றம் ஏதும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்தார். ரெப்போ வட்டி விகிதம் 6.50% ஆகவே தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாததால் வாகன கடன் மற்றும் வீட்டு கடனுக்கான வட்டியில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் RBI தெரிவித்துள்ளது. இதனால்,...

0

தமிழக மாணவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி… தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடிகள் மற்றும் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயன்பெறும் பள்ளிகளில் முன்னாள் முதல்வர்களின் பிறந்த நாள் அன்று மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவையில் இனி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் அன்றும் பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்த நாள் கடந்த ஜூன் 3 ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் கோடை விடுமுறையின் காரணமாக பாள்ளிகள் திறக்கபடாமல் இருந்தது. அதன்பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட பின்பும் மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்படவில்லை. இதையடுத்து, கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக ஆகஸ்ட் 14 ஆம் தேதி அனைத்து...

0

தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் தக்காளியின் விலை..! விலையை பார்த்து ஷாக்கான இல்லத்தரசிகள்!

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருளான தக்காளியின் விலை அதிகமானதால் இல்லத்தரசிகளுக்கு ஒரு போராட்டமாக இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு கிலோ தக்காளியின் விலை 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த சில வாரங்ககளாகவே தக்காளியின் விலை அதிகரித்து வந்ததின் விளைவாக ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படது. அதனையடுத்து, சென்னை கோயம்பேடு மார்க்கெடில் 700 டன் தக்காளி இறக்குமதி ஆனதால் ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய் வரை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு கடந்த வாரம் தமிழகத்தில் தொடர்ந்து தக்காளியின் வரத்து அதிகரித்த காரணத்தினால் தக்களியின் விலை சற்று குறைந்துகாணப்பட்டது. அந்த வகையில் தக்காளியின் விலை படி படியாக குறைந்து ஒரு கிலோ தக்காளி 60 ரூபாயிலிருந்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைய...

0

பொறியியல் கலந்தாய்வு முடிவு : 193 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை

தமிழகத்தில் அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் உள்ள 442 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் தொடங்கியது. இந்நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதையடுத்து, தற்பொழுது பொறியியல் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அவற்றில், தமிழகத்தில் உள்ள மொத்தம் 442 பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 378 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு மூலம் தான் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன்படி, முதற்கட்ட கலந்தாய்வின் முடிவில் 193 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்றும், 20 கல்லூரிகளில் மட்டும் 50 சதவீத மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில்,...

0

தமிழ் எழுத்துகளால் வடிவமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை..! எங்க இருக்குன்னு தெரியுமா? உடனே தெரிஞ்சிகோங்க…

கோவை மாநகராட்சி இயற்கை சூழலுடன் வளர்ந்து வரும் ஒரு மாநகராட்சியாக உள்ளது. இந்த கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் 7 குளங்கள் சீரமைக்கப்பட்டு குளக்கரைகளில் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்று உள்ளன. இதே போல் ஸ்மார்ட் சிட்டி பணிகள் பொள்ளாச்சி சாலையில் உள்ள குறிச்சி குளம் பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக குறிச்சி ரவுண்டானாவில் உள்ள மையத்தில் திருவள்ளுவரின் சிலை தமிழ் எழுத்துக்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திருவள்ளுவரின் சிலை பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு வர்ணம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த திருவள்ளுவர் சிலை 20 அடி உயரமும் 2.50 டன் எடையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அறம் என்ற வார்த்தை திருவள்ளுவரின் நெற்றியில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், அறம் என்ற...