தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – ஆகஸ்ட் 26ல் ஏற்பாடு!


தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – ஆகஸ்ட் 26ல் ஏற்பாடு!
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – ஆகஸ்ட் 26ல் ஏற்பாடு!

தமிழகத்தில் வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி புதுக்கோட்டை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

வேலைவாய்ப்பு முகாம்

தமிழகத்தில் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி புதுக்கோட்டை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியிலும் இந்த முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் 150க்கு மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கின்றன. மேலும் இந்த முகாமில் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.இ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

 

அது மட்டுமில்லாமல் வேலை தேடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம். இந்த முகாமிற்கு நேரில் வரும் போது தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் கல்விச்சான்று நகல் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *