ஆக.19 ( சனிக்கிழமை) அன்று பள்ளிகள் செயல்படும் – செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவு!!


ஆக.19 ( சனிக்கிழமை) அன்று பள்ளிகள் செயல்படும் – செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவு!!
ஆக.19 ( சனிக்கிழமை) அன்று பள்ளிகள் செயல்படும் – செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவு!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் வரும் சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் உத்தரவு:

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி அன்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆடிப்பூரம் திருவிழா நடத்தப்பட்டது. அதிக அளவிலான பக்தர்கள் வருகையை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கும் அன்றைய தினம் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. இதற்கான மாற்று வேலை நாள் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதியான சனிக்கிழமை அன்று முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அன்றைய நாளும் விடுமுறை அளிக்கப்பட்டது.

 

இதனால் இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்ய ஆகஸ்ட் 19ஆம் தேதி அதாவது வரும் சனிக்கிழமை அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அனைத்து வட்டார கல்வி அலுவலர்களுக்கும் தெரிவித்துள்ளார்.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *