தமிழகத்தில் கொட்டிதீர்க்கும் மழை – அடுத்த 7 நாட்களுக்கு அலர்ட்!

தமிழகத்தில்கொட்டிதீர்க்கும் மழை – அடுத்த 7 நாட்களுக்கு அலர்ட்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகி

றது. இந்த மழையானது அடுத்த 7 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் பரவலாக பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (ஆக.17) முதல் ஆகஸ்ட் 23 வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் படி இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 

அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 22 வரை மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று (ஆகஸ்ட் 17) மற்றும் நாளை (ஆகஸ்ட் 18) , தென்தமிழாக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *