வெற்றிகரமாக விண்ணில் தரையிறக்கப்பட்ட சந்திராயன் 3..! அடுத்த 14 நாட்கள் விண்ணில் நடக்கப் போவது என்ன?
சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கியது. கடந்த 40 நாட்களாக நிலவை நோக்கி பயணித்து வந்த சந்திரயான் விண்கலம் தான் சேர வேண்டிய இடத்தில் வெற்றிகரமாக சேர்ந்தது. அதன்பின், அதிலிருந்த பிரக்யான் ரோவர் அடுத்த 14 நாட்களுக்கு நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள தரையிறங்கியது. இந்நிலையில், நிலவில் தரையிறங்கிய ரோவர் உடனடியாக தனது பணிகளைத் தொடங்காது. ரோவரில் உள்ள கருவிகள் நிலவில் உள்ள சூழலைப் பொறுத்து வெளியே வர ஒருநாள் கூட ஆகலாம். இந்த ரோவர் ஒவ்வொரு நாளும் சுமார் 500 மீட்டர் துரத்திற்கு நிலவின் பரப்பில் ஊர்ந்து செல்லும். இதன்படி, பிரக்யான் ரோவரின் முக்கியப் பணி நிலவின் மேற்பரப்பை பற்றியும் அதிலுள்ள கனிம வளங்கள் குறித்து ஆய்வு செய்வதுமே...