Category: news

the-lowest-price-of-tomatoes-in-one-day-is-that-much-per-kilo-read-now 0

ஒரே நாளில் சரசரவென குறைந்த தக்காளியின் விலை..! ஒரு கிலோ இவ்வளவுதானா… இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. தொடக்கத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 க்கு விற்கப்பட்ட விலையில் வரத்து குறைவின் காரணமாக தக்காளியின் விலை மேலும் அதிகரித்தது. கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.180 முதல் ரூ.200 க்கு விற்பனை செய்யப்பட்டது. தமிழகத்தில் தக்காளியின் இந்த விலை ஏற்றம் காரணமாக இல்லத்தரசிகள் பலரும் தக்காளி இல்லாமல் சமைப்பது எப்படி என்று சமூக வலைதளங்களில் தேடி வருகின்றனர். அந்த அளவிற்கு தக்காளியின் விலை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதையடுத்து, தக்காளியின் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக சென்னை கோயம்பேடு...

0

மாணவர்களே இனி மறந்தும் கூட இந்த தப்ப பண்ணிடாதீங்க… வெளியான முக்கிய தகவல்!!

தமிழகத்தில் முன்னதாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இதில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது 500 மதிப்பெண்களுக்கும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 1200 மதிப்பெண்களுக்கும் நடத்தப்பட்டது. ஆனால், கடந்த சில வருடங்களாகவே 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் என மூன்று வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் 10 ஆம் வகுப்புக்கு 500 மதிப்பெண்களும் 11 ஆம் வகுப்புக்கும் 600 மதிப்பெண்கள் மற்றும் 12 ஆம் வகுப்புக்கு 600 மதிப்பெண்களுக்கும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமான மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக...

rs1000-entitlement-tamil-nadu-chief-ministers-important-advice-today-read-now 0

ரூ.1000 உரிமைத்தொகை… இன்று தமிழக முதலைமைச்சர் முக்கிய ஆலோசனை!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மகளிர் உரிமை தொகை வழங்குவது தொடர்பாக இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்க்கான படிவங்கள் வழங்கபட்டு வருகின்றனர். இதன் தொடர்பாக மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த  திட்டத்திற்கு சிறப்பு முகாமில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2.63 லட்சம் பேர்  விண்ணபித்துள்ளதாகவும்  இதுவரையில் சுமார் 79.66  லட்சம் வரை   விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மகளிர் உரிமை திட்டம் ஆனது ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை மறுமுறை விண்ணப்பம்  பெறப்படும் என்றும் வரும் 5 ஆம் தேதி  முதல் 16 ஆம் தேதி வரை  இரண்டாம் கட்ட முகாம் நடைபெறும்...

0

சுதந்திர தின விழா : சென்னையில் இன்று முதல் ஒத்திகை நிழ்ச்சி ஆரம்பம்!

வருகிற ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழாவில் முதல் அமைச்சர் மு .க.ஸ்டாலின்  சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசிய  கொடி ஏற்ற உள்ளார். இந்நிலையில், சுதந்திர விழாவை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் ஒத்திகை  நிகழ்ச்சி  நடைபெற்று வருகிறது. இதனையொட்டி இன்று  சென்னையில் காமராஜர் சாலையில் சுதந்திர தின விழாவின் முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சி சிற்ப்பாக  நடைபெற்று வருகின்றன.  இதற்காக ஏழு  படை பிரிவு வீரர் வீராங்கனைகள் மற்றும் காவல் படை ஆகியோர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து விருது வழங்கும் நிகழ்ச்சிக்கான ஒத்திகையானது வருகிற 10/08/2023  மற்றும் 13/08/2023  அன்று நடைபெற  உள்ளது.  இந்நிகழ்ச்சியானது ராஜாஜி சாலையில் காலை  6 மணி முதல் ஒத்திகை முடியும் வரை  நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

if-the-water-level-of-mettur-dam-has-decreased-so-much-what-is-the-reason-read-it-now 0

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இவ்வளவு குறைஞ்சிடிச்சா… என்ன காரணம்?

சேலம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் மேட்டூர் அணையைப்பற்றி  நாம் அறிந்திருக்கிறோம் ….! ஏனென்றால்  இந்த அணையின் மூலம்  தமிழ்நாட்டில்  உள்ள சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம்  போன்ற 12 மாவட்டங்கள்  பாசன வசதியை பெறுகின்றன. இந்நிலையில், இந்த மேட்டூர் அணையில்யிருந்து குருவை பாசனத்திற்காக   ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர்   திறக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்த ஆண்டும் காவிரியிலிருந்து கடந்த 12 ஆம் தேதி  குருவை சாகுபடி செய்ய சுமார் 12 ஆயிரம் கண அடி வீதம் திறந்து விடப்பட்டது. இதையடுத்து, இந்த ஆண்டு மழை இல்லாத காரணத்தினால் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர்  திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த காரணத்தினால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின்...

allow-these-four-days-to-go-to-chaturagiri-hill-devotees-this-announcement-is-for-you-read-now 0

சதுரகிரி மலைக்கு செல்ல இந்த நான்கு நாட்களுக்கு அனுமதி..! பக்தர்களே இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்!!

சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம்  கோவில் ஆனது விறுதுநகர் மாவட்டம்  வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது. சதுரகிரி கோவிலில்  ஆடி அமாவாசை  முன்னிட்டு   6 நாட்களுக்கு  பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை  6 நாட்களுக்கு சதுரகிரி சுந்தர,சந்தன மகாலிங்கம்  கோவில்   திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். முன்னதாக இந்த கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் மட்டும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்பொழுது நாட்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கோவிலில் இருக்கும் நீரோடை பகுதிகலில் பக்கதர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆடி அம்மாவாசை முன்னிட்டு  வழக்கம் போல் வரும்...

0

ரசிகர்கள் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் தேதியில் திடீர் மாற்றம்..! என்ன காரணம்?

நடப்பு ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது வருகின்ற அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த உலக கோப்பை தொடரில் அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு போட்டியாக இந்தியா – பாகிஸ்தான் போட்டி இருக்கும். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அக்டோபர் 15 ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அன்றைய தினம் நவராத்திரி என்பதால் அன்றைய தேதியில் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காரணத்தை கருத்தில் கொண்டு தேதியை மாற்ற கோரி பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதன் பெயரில் அக்டோபர் 14 ஆம் தேதிக்கு போட்டியை மாற்ற கிரிக்கெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இடையே...

0

இனிமே டிரைவரே இல்லாமல் கார் ஓட்டலாம்..! ஆட்டோமேட்டிக் காரின் வீடியோ வைரல்!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு வாகனங்களின் எண்ணிகையும் அதிகரித்து வருகிறது. எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைத்தாலும் வாகனங்களை தான் பயன்படுத்தி வருகிறோம். அந்த அளவிற்கு வாகனங்கள் மக்களோடு ஒன்றியதாக மாறிவிட்டது. ஒரு குடும்பத்தில் சொந்த வீடு இருக்கோ இல்லையோ சொந்த கார் அல்லது பைக் வைத்துள்ளனர். இந்நிலையில், வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வபோது வாகனங்களில் புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில், டெஸ்லா நிறுவனம் ஓட்டுநர்கள் இல்லா வாகனங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கான கடைசி கட்ட பணிகளும் நிறைவடைந்து அதற்கான டெஸ்ட்டும் நடத்தப்பட்டது. இந்நிறுவனம் பெங்களூரில் இந்த டெஸ்டை நடத்தியது. அதற்கான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வீடியோவில்...

are-you-eligible-for-rs-1000-entitlement-can-see-your-mobile-phone-see-here 0

ரூ.1000 உரிமைத்தொகை பெற நீங்கள் தகுதியானவரா? இல்லையான்னு? இனி உங்க மொபைல் போன்லையே பார்க்கலாம்..!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றதிலிருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கை மற்றும் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், தமிழக பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் வாழக்கை தரத்தை மேம்படுத்துவதற்கும் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் சுமார் 1 கோடி பெண்களுக்கு வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் ரூ.1000 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார். அதற்கான பணிகள் தற்பொழுது தமிழக அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது. இதற்கான விண்ணப்பங்களை மகளிர் பெற அலைய தேவையில்லை. நியாய விலை கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று அதனை வழங்கி வருகின்றனர். இந்த விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கும் அந்தந்த ஊரிலேயே சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு...

are-you-paying-extra-for-cylinder-delivery-this-important-news-is-for-you-dont-miss 0

நீங்களும் சிலிண்டர் டெலிவரி பண்றவங்களுக்கு கூடுதலா காசு கொடுக்கிறீங்களா? அப்போ இந்த முக்கிய செய்தி உங்களுக்குத்தான்!!

முன்னதாக விறகு அடுப்பில் தான் சமைத்து சாப்பிட்டு வந்தோம். ஆனால் தற்பொழுது உள்ள அவசர காலகட்டத்தில் விறகு அடுப்பில் சமைத்து குறிப்பிட்ட நேரத்திற்கு கொடுப்பது என்பது மிகவும் கடினமாக மாறியுள்ளது. இல்லத்தரசிகளின் இத்தகைய சிரமத்தை போக்க கேஸ் சிலிண்டர் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கேஸ் சிலிண்டரிலிருந்து வெளியாகும் கேஸிலிருந்து நெருப்பை உருவாக்கி அதன் மூலம் சுலபமாக சமையல் செய்ய முடியும். இந்நிலையில், சமையலுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த கேஸ் சிலிண்டர்கள் தீந்து விட்டால் அதனை புக் செய்து பெறலாம். இதுபோன்று புக் செய்து பெறப்படும் சிலிண்டரை டெலிவரி செய்யும் நபர்களுக்கும் பணம் தர வேண்டி உள்ளதாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதுகுறித்து பெட்ரோலிய அமைச்சகம் கூறுகையில், சிலிண்டரை டெலிவரி...