தகுதி உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்.. உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
விருதுநகர்: ரேஷன் கார்டு அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை குறித்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறியதாக பரவிய தகவல் நேற்று பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை மறுத்த அவர், தகுதி உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில் மகளிர் உரிமை தொகை வழங்குவதில் சில குறைகள் இருக்கிறது.. அதுவிரைவில் சரி செய்யப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார். அதுபற்றி பார்ப்போம் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர். உங்களுக்கும் எனக்கும் உள்ள உறவு 50 வருட உறவு உள்ளது. உங்களைப் பார்ப்பதில் எனக்கு சந்தோசம். என்னை பார்ப்பதில் உங்களுக்கு சந்தோசம். கலைஞர்...