முன்கூட்டியே வரும் மகளிர் உரிமைத் தொகை? தமிழக அரசு வெளியிடும் அறிவிப்பு என்ன?
பெண்கள் பொருளாதார ரீதியாக யாரையும் சாராமல் இருக்க வேண்டும், அவர்களது உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதற்காக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2023 செப்டம்பர் 15 முதல் இந்த திட்டம் தொடங்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் பயனாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மகளிர் உரிமைத் தொகை பயனாளிகள் தமிழக அரசு அறிவித்த பொருளாதாரத் தகுதி பட்டியலுக்குள் வரும் பெண்கள் இந்த திட்டத்தில் தொடர்ந்து சேர்க்கப்பட்டு வருகின்றனர். திட்டம் தொடங்கும் போது ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரமாக இருந்த பயனாளர்களின் எண்ணிக்கை தற்போது சுமார் ஒரு கோடியே 16 லட்சம் பேர் இந்த திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் இந்த திட்டம் வெற்றிகரமாக...