நாட்டுக்கோழி, ஆட்டுப் பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் வரை அரசு மானியம்..!! தொழில்முனைவோருக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு..!!
அரசு மானியத்தில் நாட்டுக் கோழிப் பண்ணை, ஆட்டுப் பண்ணை அமைக்க தொழில்முனைவோருக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கவும், கால்நடை பண்ணை அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. மேலும், தீவன பயிர் சேமிப்பு, தீவன விதைகள் உற்பத்தி, கோழி, செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு மற்றும் பன்றி வளர்ப்பு பண்ணைகள் அமைத்து தொழில் முனைவோரை உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. * நாட்டுக்கோழி பண்ணையுடன் குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. * செம்மறி ஆடு / வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் * பன்றி வளர்ப்பு பண்ணைக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வ்ரை மானியம். * அதேபோல் வைக்கோல்,...