Category: news

தமிழகத்தில் இன்றும், நாளையும் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..! எதற்கு தெரியுமா?

பொதுவாக தமிழ்நாட்டில் வார இறுதி நாட்களின் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக கானாப்படுவது வழக்கம். வேலைக்காகவும், படிப்பிற்காகவும் வேற ஊர்களுக்கு சென்றவர்கள் வார இறுதி நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த வாரத்தின் இறுதி நாளான இன்றும்(ஜூலை 15) நாளையும் (ஜூலை 16) சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக மிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்றும், நாளையும் கூடுதலாக 600 சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்பட உள்ளது, அவற்றில், சென்னையில் இருந்து 300 பேருந்துகளும், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து...

TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு! டி.என்.பி.எஸ்.சி தேர்வர்கள் மிஸ் பண்ணாம படிச்சிருங்க..! tnpsc.gov.in

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பதவிகளுக்கான போட்டித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு அரசு உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு TNPSC வெளியிட்டது. இந்நிலையில், இந்த பதவிக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட நிலையில், உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கான முதல் நிலை தேர்வு கடந்த மே மாதம் 3 ஆம் தேதி நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த முதல்நிலை தேர்வுக்கான முடிவுகளை தற்பொழுது TNPSC வெளியிட்டுள்ளது. இதையடுத்து, தேர்வர்கள் இந்த முடிவுகளை TNPSC யின் அதிகாரப்பூர்வ தளமான https://tnpsc.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடியும். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்தகட்ட தேர்வான முதன்மை தேர்வுக்கு...

தமிழகத்தில் முட்டை விலை தொடர்ந்து உயரும்..! என்ன காரணம்?

முட்டை என்றாலே நம் அனைவருக்கும் நினைவில் வருவது நாமக்கல் மாவட்டம் தான். ஏனெனில், நாமக்கல் மாவட்டத்தில் தான் அதிக அளவு முட்டையை உற்பத்தி செய்து மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் நாமக்கல் மாவட்டத்தில் இருந்துதான் முட்டை விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தினசரி இங்கு சுமார் 3.50 கோடி முட்டை உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம், கேரளா போன்ற பல்வேறு மாநிலத்துக்கு அனுப்பப்படுகிறது. வெளி மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல், வெளி மாவட்டங்களுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், NECC எனப்படும் National Egg Coordination Committee தான் தினந்தோறும் முட்டைகளின் விலையை நிர்ணயம் செய்து வருகின்றனர். இதன் அடிப்படையில்தான் வியாபாரிகள் முட்டையை விற்பனை செய்து வந்தனர். ஆனால், ஒரு சில வியாபாரிகள் இதனை பின்பற்றாமல் இருப்பதாக தெரிவித்துள்ளனர்....