மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு நீங்க இன்னும் விண்ணப்பிக்கலையா? கவலை வேண்டாம்… முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழக அரசு வெளியிட்டுள்ள மகளிர் உரிமை திட்ட அறிவிப்பில், “பெண்கள் சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கும், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமை 24.07.2023 அன்று தருமபுரி மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இதனையடுத்து, கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களை பதிவு செய்ய இரண்டு கட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 20,765 நியாய விலைக் கடைகளில் இருக்கும் குடும்ப அட்டைகளுக்கு 24.07.2023 முதல் 04.08.2023 வரை நடைபெற்ற விண்ணப்பப் பதிவு முகாமில் 88.34 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முதற்கட்ட சிறப்பு முகாமில் ஒரு சில பெண்கள் விண்ணபிக்க தவறியுள்ளதாக கூறப்பட்ட நிலையில்,...