Star TamilExam

0

தமிழக அரசு > கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 1.5 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளது!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் அன்று கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். அதன்படி, கடந்த மாதம் 24 ஆம் தேதியில் விண்ணப்பங்களை பதிவு செய்வதற்க்கு தருமபுரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட பதிவுக்கு 1.5 கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசு தரப்பில் எதிர்பார்த்த அளவுக்கு விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளதால் மீண்டும் முகாம் அமைக்க வாய்ப்பு இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்களை விண்ணப்பிக்க சிறப்பு முகாம்களும் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தமிழக அரசு தரப்பில் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்கள் மீது பரிசீலனை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும்,...

farmers-have-you-also-bought-rs-2000-in-pm-kisan-scheme-now-you-are-going-to-pay-rs-3000new-information-released-read-it 0

விவசாயிகளே நீங்களும் PM கிசான் திட்டத்தில் ரூ.2000 வாங்கிட்டு இருக்கீங்களா..? இனி ரூ.3000 தரப்போறாங்களாம்..! வெளியான புதிய தகவல்!

விவசாயிகள்தான் இந்தியாவின் முதுகெலும்பு என்று கூறுவார்கள். இத்தகைய விவசாயத்தை காக்கும் நோக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒரு திட்டம் தான் பிரதான் மந்திரி கிசான் சம்மன் திட்டம்(PM கிசான் திட்டம்) ஆகும். PM கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 என ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு 14 வது தவணை வரை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தின் மூலம் பெறப்படும் தொகையை வைத்து விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு தேவையான விவசாய பொருட்களை மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.   இந்நிலையில், நாட்டின் விளைவாசியானது...

tamil-nadu-students-will-hit-the-jackpot-chief-minister-m-k-stalin-action-announcement-read-it-now 0

தமிழக மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்…! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

தமிழக அரசு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் மற்றும் உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட ஒரு திட்டம்தான் “காலை சிற்றுண்டி” திட்டம். இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு தொடக்க பள்ளியில் பயிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இந்நிலையில், காலை உணவு திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், பள்ளிக்கு வரும் குழந்தைகள் சாப்பாடு இல்லாமல் இருப்பது தவிர்க்கப்படும் என்பதாகும். இந்த திட்டமானது தற்பொழுது வரை ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட்ட நிலையில், இந்த திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்படும் என்று...

a-new-type-of-corona-is-coming-to-scare-people-again-important-warning-issued-by-who-watch-now 0

மீண்டும் மக்களை மிரட்ட வரும் புதிய வகை கொரோனா..! WHO வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!!

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள யுகான் நகரில் கொரோனா என்ற வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அதன்பின், இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் பரவ தொடங்கியது. இந்த வைரஸானது பல லட்சகணக்காணக்கான உயிர்களை பழிவாங்கியது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டது. கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஓராண்டுகள் ஆகியும் கட்டுக்குள் கொண்டுவரப்பட முடியாமல் பல நாடுகளும் தவித்தனர். அதன்பின், கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அதனை மக்களுக்கு செலுத்தினர். இதன் விளைவாக கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், ஊரடங்கும் தவிர்க்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.   இந்நிலையில், மேற்கத்திய நாடுகளான அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை வைரஸ் தொற்று...

if-you-are-going-out-too-do-you-spend-a-lot-of-money-by-booking-an-auto-or-car-worry-no-more-tamil-nadu-government-new-app-to-be-released-soon 0

நீங்களும் வெளிய போகனுன்னா ஆட்டோ, கார் புக் பண்ணி அதிக காசு செலவு பண்றீங்களா..? இனி கவலை வேண்டாம்! விரைவில் வெளியாகும் தமிழக அரசின் புதிய செயலி!!

இன்றைய காலகட்டத்தில் அருகில் இருக்கும் கடைக்கு செல்ல வேண்டும் என்றாலும் அதற்கு வாகனத்தைதான் பயன்படுத்தி வருகிறோம். அந்த அளவிற்கு, வாகனங்கள் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். வாகனங்கள் இல்லாத பலரும் வாடகை ஆட்டோ அல்லது கால் டாக்கியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இதுபோன்று வாடகை ஆட்டோ அல்லது கால் டாக்சியை புக் செய்யும்பொழுது அதிக கட்டணத்தை வசூலிப்பதுடன் சரியான நேரத்திற்கும் வருவதில்லை என்று பலரும் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஓலா, ஊபர் உள்ளிட்ட தனியார் செயலி மூலமாக அதிகமாக ஆட்டோ மற்றும் கார் இயங்கி வருகிறது.   இதுபோன்ற தனியார் செயலிகளின் மூலம் பணிபுரியும் ஆட்டோ மற்றும் கார் டிரைவர்களுக்கு கமிஷன் சரியாக கொடுப்பதில்லை என்றும் ஒரு நாளைக்கு கட்டாயம் இத்தனை...

india-will-create-a-new-history-in-a-few-hours-with-full-details-here-read-it-now 0

இன்னும் சில மணி நேரத்தில் இந்தியா படைக்கபோகும் புதிய சரித்திரம்..! முழு விவரங்களுடன்…

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ கடந்த ஜூலை 14 ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன் 3 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட பிறகு ஒவ்வொரு படியாக உயர்த்தப்பட்டு பூமியின் சுற்றுவட்ட பாதையை முடித்து விட்டு நிலவின் சுற்றுவட்ட பாதையை சுற்ற தொடங்கியது. அதன்பின், கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி சந்திராயன் 3 விண்கலத்திலிருந்து விக்ரம் லேன்டர் தனியாக பிரிக்கப்பட்டது. இந்த விக்ரம் லேண்டரானது 23 ஆம் தேதி(இன்று) மாலை மாலை 6.04 மணியளவில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கி விட்டால் இந்தியா சரித்திரம் படைத்துவிடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வை பொதுமக்கள் காணும் வகையில்...

id-you-miss-to-apply-for-this-tamilnadu-government-job-apply-now-tn-mrb-jobs-more-than-100-vacancies 0

இந்த தமிழ்நாடு அரசு வேலைக்கு விண்ணப்பிக்க மிஸ் பண்ணிட்டீங்களா? உடனே அப்ளை பண்ணிடுங்க! 100-க்கும் மேற்பட்ட காலியிடங்கள்!

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB) தமிழ்நாட்டில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், ECG டெக்னீஷியன் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை mrb.tn.gov.in இல் 01-08-2023 தேதியன்று வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21-ஆகஸ்ட்-2023 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 28 ஆகஸ்ட் 2023 வரை ECG டெக்னீசியன் பதவிகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. MEDICAL SERVICES RECRUITMENT BOARD (MRB) 7th Floor, DMS Building, 359, Anna Salai,Teynampet, Chennai-600 006. TN MRB RECRUITMENT 2023 DETAILS CORRIGENDUM As per the direction of the Government and the request of the candidates, those who have undergone the course from 1995 to 2005...

a-shocking-news-for-the-students-of-11th-and-12th-class-public-examination-twice-a-year-from-now-on-central-government-new-notification-read-it 0

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி… இனி வருசத்துக்கு 2 முறை பொதுத்தேர்வு..! மத்திய அரசின் புதிய அறிவிப்பு!!

முன்னதாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இதில் 10 ஆம் வகுப்பு 500 மதிப்பெண்களும், 12 ஆம் வகுப்புக்கு 1200 மதிப்பெண்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், தற்பொழுது உள்ள புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில், 10, 11, 12 ஆகிய மூன்று வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் 10 ஆம் வகுப்புக்கு 500 மதிபெங்களுக்கும், 11 ஆம் வகுப்புக்கு 600 மதிப்பெண்களுக்கும், 12 ஆம் வகுப்புக்கு 600 மதிப்பெண்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு மீண்டும் ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும்...

0

பெண்களே மாதம் ரூ.1000 வாங்க நீங்களும் விண்ணபிச்சிட்டீங்களா..? உங்க விண்ணப்பத்தை சரிபார்க்க வீடுகளுக்கே வரும் அதிகாரிகள்!! உஷாரா இருந்துகோங்க…

தமிழகத்தில் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணாவின் பிறந்த நாளில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 1 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில், இந்த திட்டத்திற்கான விண்ணபங்களை வழங்கும் சிறப்பு முகாம் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இந்த சிறப்பு முகாம் மூலம் இதுவரை சுமார் 1.63 கோடி பெண்கள் இந்த திட்டத்திற்காக விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த திட்டத்தில் விண்ணப்பித்தவர்களின் விண்ணபங்கள் நாளை(ஆகஸ்ட் 24) முதல் சரிபார்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சரிபார்க்கும் பணியில் ஏற்கனவே நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வின் அடிப்படையில் ரூ. 1000 உரிமைத் தொகைக்கான விண்ணப்பத்தில் ஏதேனும் பிழை அல்லது...

0

இந்திய வரலாற்றில் இன்று முக்கிய நாள்!! ஒருபக்கம் பார்த்தா சந்திராயன் 3 தரையிறக்கம்… மறுபக்கம் பார்த்தா உலக கோப்பை செஸ் போட்டி…

இந்தியாவின் மிக முக்கிய நாளாக இன்று(ஆகஸ்ட் 23) இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏனென்றால், இந்தியாவை பெருமைப்படுத்தும் விதமாக இரண்டு முக்கிய நிகழ்வுகள் இன்று நடைபெற உள்ளது. அவற்றில் ஒன்று, சந்திராயன் 3 விண்கலம் இன்று நிலவில் தரையிறங்க உள்ளது. மற்றொன்று உலகக்கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியில் இரண்டாம் சுற்று இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் பிரக்ஞானந்தாவும் அமேரிக்கா சார்பில் பேபியானோ கருணாவும் மோத உள்ளனர். இந்நிலையில், சதுரங்க உலகக் கோப்பை தொடர் வரலாற்றிலேயே முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா படைத்துள்ளார். இதையடுத்து, நேற்று நடைபெற்ற இறுதி போட்டியின் முதல் சுற்றானது சமனில் முடிந்தது. அதன்பிறகு, இன்று(ஆகஸ்ட் 23) இரண்டாம் சுற்று நடைபெற உள்ளது.   உலகக்...